கொத்தனார் தற்கொலை


கொத்தனார் தற்கொலை
x

கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே திருத்தலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 23). கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வன் எலி பேஸ்டை (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story