அரசு பள்ளியில் கணித மன்ற விழா


அரசு பள்ளியில் கணித மன்ற விழா
x

அரசு பள்ளியில் கணித மன்ற விழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை தாங்கி, கணிதங்கள், மனக்கணக்குகள், கணித புதிர்களை குறிப்பிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. அதில் கணிதம் சார்ந்த புதிர்கள், கேள்விகள் மற்றும் கணக்குகள் இடம் பெற்றிருந்தன. வினாடி-வினாவில் மதிப்பீட்டாளராக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ் செயல்பட்டார். நிகழ்ச்சிகளை ஆசிரியை பைரவி தொகுத்து வழங்கி, எளிய முறையில் கணக்குகள் செய்தல் மற்றும் இரட்டை இலக்க பெருக்கல் வாய்ப்பாடுகள் படித்தல் பற்றிய குறிப்புகளை கற்பித்தார். அவனைத்தொடர்ந்து வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் கணிதம் பற்றிய பாடல் மற்றும் கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கி பேசினார்கள்.


Next Story