பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் விவகாரம்; பேராசிரியர்கள் போராட்டம்

முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பேராசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.
சேலம்,
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணைவேந்தர் ஜெகநாதனை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அரசு இரண்டு முறை ஆதாரங்களுடன் உத்தரவு கடிதம் அனுப்பியும், முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர்கள், பதிவாளரை காப்பாற்ற துடிக்கும் துணை வேந்தர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





