வேலைக்கு சென்ற நர்ஸ் மாயம்

வேலைக்கு சென்ற நர்ஸ் மாயமானார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுதாழைமேடு கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பிரபாவதி(வயது 19). டிப்ளமோ நர்சிங் முடித்த இவர் வாரியங்காவல் கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் எழிலரசி, பல்வேறு இடங்களில் தேடியும் பிரபாவதியை காணவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் மாயமான பிரபாவதியை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





