சென்னை தின கொண்டாட்டம்: குதிரை வண்டி சவாரியை தொடங்கி வைத்த மேயர் பிரியா...!


சென்னை தின கொண்டாட்டம்:  குதிரை வண்டி சவாரியை தொடங்கி வைத்த மேயர் பிரியா...!
x
தினத்தந்தி 27 Aug 2023 10:12 AM GMT (Updated: 27 Aug 2023 10:39 AM GMT)

5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை சென்னை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை சென்னை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த குதிரை வண்டி சவாரியானது 3 வண்டிகள் மூலம் நடைபெற்றது. ஒவ்வொரு வண்டிக்கும் சராசரியாக 7 குழந்தைகள் பங்கு பெற்ற இந்த குதிரை வண்டி சவாரியானது விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன், தெற்கு ரெயில்வே தலைமையகம், சென்னை ஐகோர்ட்டு வரை சென்று மீண்டும் ரிப்பன் கட்டிடத்திற்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலைமை செயல் அலுவலர் லட்சுமிமேனன், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story