மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
x

பாப்பிரெட்டிப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் இறந்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் அயத்பாஷா (வயது 40). இவரது மனைவி மும்தாஜ் (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அயத் பாஷா காளிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரிடம் அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல், அவருடைய மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க விட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் இருந்து அயத்பாஷாவை, சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பி.பள்ளிபட்டியில் நடைபெற்ற கெபி திருவிழாவுக்கு சென்றனர். அப்போது பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி முன் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பின்னால் ஒரு பக்கமாக உட்கார்ந்து இருந்த அயத்பாஷா கீழே விழுந்தார்.

இதில் தலை உள்ளிட்ட உடலில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story