திருமணமாகாத விரக்தியில் மெக்கானிக் தற்கொலை
![திருமணமாகாத விரக்தியில் மெக்கானிக் தற்கொலை திருமணமாகாத விரக்தியில் மெக்கானிக் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/714951-202203262246271161retired-bank-officer-suicidesecvpf.gif)
மயிலாடுதுறை அருகே திருமணமாகாத விரக்தியில் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது42). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களாக தனக்கு திருமணமாகவில்லையே என்று நண்பர்களிடம் மன விரக்தியுடன் கூறி வந்தார். இந்த நிலையில் திருமணமாகாத விரக்தியில் இருந்த ரமேஷ் கடந்த 26-ந் தேதி தனது வீட்டில் இருந்தபோது எலி மருந்தை (விஷம்) தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.