மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம்


மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம்
x
தினத்தந்தி 29 Jan 2023 1:00 AM IST (Updated: 29 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீடு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ்பவுலின் தொடங்கி வைத்தார். இதில் நகர சபை தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வட்டாரக்கல்வி அலுவலர் ராசமாணிக்கம், பள்ளி தலைமை ஆசிரியை மேரிபிரேமா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார வளமைய மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சித்திரவேலு நன்றி கூறினார்.

1 More update

Next Story