மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை:

ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான்பட்டி கிராமத்தில் செங்குள விநாயகர், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து 3 கால யாக சாலை பூைஜகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் மீனாட்சி அம்மன் கோவில் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story