தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:45 PM GMT)

ஓசூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூ

ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் தளி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி பேசினார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிகுமார், பகுதி செயலாளர் ஜி.ராமு மற்றும் மாநகர பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை, இளைஞர் எழுச்சி நாளாக 45 வார்டுகளிலும் கொண்டாடுவது, ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மாநகர தி.மு.க. சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாஞ்சில் சம்பத் தலைமையில் ஓசூரில் நடைபெறும் பட்டிமன்றத்தில் கட்சியினர் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் மாநகரத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கும், அதற்கு வாய்ப்பளித்த மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


Next Story