ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு


ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
x

தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நேற்று தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தி சிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.தீர்த்தராமன் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்து, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட நிர்வாகி சென்னகேசவன், நிர்வாகிகள் வெங்கடாசலம், பழனியப்பன், ஜெய்சங்கர், வடிவேல், வேடி, சேகர், தங்கவேல், முருகவாசன், நடராஜன், அர்த்தனாரி, ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story