மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலாஜா பேட்டையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை போஸ்டல் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 50), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோகன்பாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





