மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி


மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி. கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் அனைத்து துறையைச் சார்ந்த மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல், வேலைவாய்ப்பு அலுவலக செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தங்கவேல், போட்டித் தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவாக வேலை வாய்ப்பு அலுவலர் கே.மணிராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story