வியாபாரி குத்திக்கொலை


வியாபாரி குத்திக்கொலை
x

திசையன்விளை அருகே வியாபாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே வியாபாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

பழைய இரும்பு வியாபாரி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி மேல தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரி.

அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (46). இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரும், முத்துகிருஷ்ணனும் உறவினர்கள்.

குத்திக்கொலை

நேற்று முன்தினம் இரவில் நவ்வலடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஓட்டல் முன்பு முத்துகிருஷ்ணனும், செல்வகுமாரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணன், செல்வகுமாரிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் திடீரென்று கத்தியால் முத்துகிருஷ்ணனின் கழுத்தில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உறவினர் கைது

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், இதுகுறித்து உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். உவரி அருகே இரும்பு வியாபாரியை உறவினர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story