மதுரையில் மெட்ரோ பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது - மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் பேட்டி


மதுரையில் மெட்ரோ பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது -   மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் பேட்டி
x

ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே 18 ரெயில் நிலையங்கள் என்பது 27 ரெயில் நிலையங்களாக மாற்றப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறியுள்ளார்.

சென்னை,

மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, அதிகாரிகளுடன் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது. மதுரை மெட்ரோ ரெயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை.மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும்.

மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும். 32 கி.மீ தொலைவிற்கு மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது.

ஒத்தக்கடை - திருமங்கலம் வரை 30 கி.மீ என வரையறுத்த நிலையில் 31 கி.மீ ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே 18 ரெயில் நிலையங்கள் என்பது 27 ரெயில் நிலையங்களாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story