எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 17 Jan 2023 6:47 PM GMT)

சீர்காழியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது.விழாவிற்கு நகர செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், நற்குணன், ரவிச்சந்திரன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவை தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் பக்கிரிசாமி, அம்சேந்திரன், நாடி செல்வ முத்துக்குமரன், நெடுஞ்செழியன், பாலாஜி, நகர பேரவை செயலாளர் மணி, நகர பொருளாளர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கிளைக் கழக செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story