எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
x

ஆற்காடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காடு பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் அரங்கநாதன், பாலாஜி, ஹரிதாஸ், சித்ரா, ஒன்றிய கவுன்சிலர் காஞ்சனா சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஆற்காடு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூட்டுத்தாக்கு பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் என்.சாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் மணி, ஷங்கர், செல்வம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஏழுமலை மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், நிர்வாகிகள் தாமோதரன், ரவி, சுதாகர், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story