எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தனியாக வந்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்


எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தனியாக வந்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
x

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனியாக வந்து மரியாதை செலுத்தினார்.

சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமி அணியினர் மரியாதை செலுத்திவிட்டு சென்ற பிறகு தனியாக வந்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க.வின எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வந்த சி.வி. சண்முகம் திடீரென தனியாக வந்து மரியாதை செலுத்தியது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story