எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை நகரம், வடக்கு, தெற்கு ஒன்றியம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம், போளூர், சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், கிளை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story