பால்குட ஊர்வலம்


பால்குட ஊர்வலம்
x

வேங்கராயன்குடிகாட்டில் பால்குட ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், பைரவர், மலையாளத்தம்மன், அங்காளம்மன் ஆகிய கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 2019- ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கின் 4-ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்று காலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து தாரை தப்பட்டையுடன், வாணவேடிக்கையோடு, பக்தர்கள் பால் குடம், செடில் காவடி, பால்காவடி, பறவைகாவடி எடுத்து வந்து, வில்லாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் செய்யப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story