வடகாடு அருகே மினி மாரத்தான் ஓட்டம்


வடகாடு அருகே மினி மாரத்தான் ஓட்டம்
x

வடகாடு அருகே மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு அருகே அனவயல் கிராமத்தில் சி.கே.எம்.ஸ்போர்ட்ஸ் மற்றும் கிராம இளைஞர்கள் நடத்திய முதலாம் ஆண்டு போதை பொருள் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்களுக்கான மினி மாரத்தான் (21 கி.மீ.) ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. இதில் கர்நாடகா, கேரளா, சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விருதுநகர் போன்ற பகுதிகளில் இருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் அனவயல் பகுதியில் இருந்து தொடங்கி ஆவனம் கைகாட்டி, நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு பேப்பர்மில் ரோடு, மாங்காடு வழியாக ஓட்டப்பந்தய வீரர்கள் கடந்து வந்தனர். இதில் முதல் இடத்தை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டனும், 2-வது இடத்தை கர்நாடகாவை சேர்ந்த அனில்குமார், 3-வது இடத்தை விருதுநகரை சேர்ந்த மாரிசரத்தும், 4-வது இடத்தை கேரளாவை சேர்ந்த ஜெரால்டு சிசில், 5- வது இடத்தை மதுரையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் பிடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். முதல் 5 இடங்களை பிடித்த வீரர்களுக்கும், தலா ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story