தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவி


தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவி
x

மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

சென்னை,

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில், மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு திருவாரூரை சேர்ந்த சாந்தி தேவி மற்றும் குளித்தலையை சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூபாய் மூன்று லட்சத்துக்கான (3,00,000/-) காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், கூடுதல் ஆணையர் அ.பா.தேவேந்திர பூபதி மற்றும் வணிகவரித் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story