பால் வினியோகம் குறித்து அமைச்சர் நாசர் பால் பண்ணையில் ஆய்வு


பால் வினியோகம் குறித்து அமைச்சர் நாசர் பால் பண்ணையில் ஆய்வு
x

பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்படியாக வழி வகை செய்தார்.

சென்னை,

புயல் மழையில் ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் சா.மு.நாசர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆவின் பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைகள் உள்ளிட்ட நிலையங்களின் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து பால் உற்பத்தியை தங்கு தடையின்றி உற்பத்தி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் எவ்வித தடையின்றி சென்று சேரவும் உரிய நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார். அனைத்து பால் பண்ணைகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இரவு முழுவதும் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து கண்காணித்து மேற்பார்வை செய்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பால் பண்ணையில் தங்கியிருந்து ஊழியர்களுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டார்.

உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தி மாண்டஸ் புயல் தாக்கத்தின் விளைவாக எங்கும் பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்படியாக வழி வகை செய்தார். இதனால் சென்னை மாநகரத்தில் எந்த ஒரு பகுதியிலும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை.


Next Story