மோட்டார் சைக்கிளில் முந்த முயன்றதால் விபரீதம்:லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு


மோட்டார் சைக்கிளில் முந்த முயன்றதால் விபரீதம்:லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

மோட்டார் சைக்கிளில் முந்த முயன்றதால் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்,:

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற விவசாயி லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரேஷன் பொருட்கள்

சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாட்டை சேர்ந்த பிச்சையாபிள்ளை மகன் சுடலை. லாரி டிரைவர். இவர் நேற்று பழங்குளம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ெசயல்படும் ரேஷன்கடைகளுக்கான பொருட்களை சப்ளை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டு சாமிதோப்பில் இருந்து சாலைப்புதூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் பின்னால் நெல்லை மாவட்டம் உவரி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் லிங்கேஸ்வரன் (வயது 46) என்ற விவசாயி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

உடல் நசுங்கி சாவு

அப்போது லிங்கேஸ்வரன் திடீரென்று மோட்டார்சைக்கிள் மூலம் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story