காணாமல் போன முதியவர் அமராவதி ஆற்றில் பிணமாக மீட்பு


காணாமல் போன முதியவர் அமராவதி ஆற்றில் பிணமாக மீட்பு
x

காணாமல் போன முதியவர் அமராவதி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

கரூர்

அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 70). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், நாகமுள்ளி கிராமம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் கரையில் ஆறுமுகத்தின் வேட்டி, செருப்பு போன்றவை இருப்பதைக் கண்டு அரவக்குறிச்சி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் அமராவதி ஆற்றுப்பகுதியில் தேடினர். அப்போது ஆறுமுகம் அமராவதி ஆற்றின் கரைப்பகுதியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story