புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பந்தல் அமைக்கும் பணி மும்முரம்


புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பந்தல் அமைக்கும் பணி மும்முரம்
x

புதுக்கோட்டைக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

அரசு விழா

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி புதுக்கோட்டை வருகை தருகிறார். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழா பந்தலானது சுமார் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் எல்.இ.டி. திரைகளும் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர் கார் மற்றும் அதிகாரிகளின் கார் வருவதற்கு தனித்தனி வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இதேபோல் விழா நடைபெறும் இடமான விளையாட்டு மைதானத்திற்கு வரவும் தனி வழி அமைக்கப்பட உள்ளன.

இதற்கிடையில் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story