நகை-பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு


நகை-பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு
x

ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை-பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே மனக்கரம்பை, வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது70). அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற கண்டக்டரான இவர் தனது மனைவியுடன் மதுரையில் உள்ள மகளை பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். நேற்று காலை கோவிந்தன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து கோவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனா்.இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வீட்டில் இருந்த பிரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம், 11 கிராம் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. மேலும் தஞ்சையில் இருந்து மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து கொல்லை புறம் வரை ஒடி நின்றுவிட்டது. இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story