குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்


குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
x

திருக்கடையூரில் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூரில் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குரங்குகள் தொல்லை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து அங்கு வைத்துள்ள ெபாருட்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும், குழந்தைகள், வயதானவர்களையும் கடித்து வருகிறது.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story