மின்சாரம் தாக்கி தாய், மகள் சாவு


மின்சாரம் தாக்கி தாய், மகள் சாவு
x

வெந்நீர் போட்டு குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி தாய்-மகள் உயிரிழந்தனர்.

கோவை,

கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (வயது 52) மற்றும் மகள் அர்ச்சனா (18) ஆகியோர் உள்ளனர். அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு நேரம் ஆனதால் அவசர, அவசரமாக குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெந்நீரில் குளிப்பதற்காக அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை போட்டு சுவிட்சை ஆன் செய்தார். சிறிது நேரத்தில் வாளித்தண்ணீர் சூடாக ஆரம்பித்தது.

தாய்-மகள் சாவு

இந்த நிலையில் அர்ச்சனா சுவிட்சை ஆப் செய்து விட்டு, வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டபோது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அலறித் துடித்தார். இதனை அறிந்ததும், சமையல் அறையில் இருந்து ஓடிவந்த அவரது தாய், மகளை காப்பாற்ற முயன்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


Next Story