இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் சாவு


இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2023 7:13 PM GMT (Updated: 19 Jun 2023 7:23 AM GMT)

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் மகள் ஐஸ்வர்யா (வயது 28). இவர் சென்னையில் வேலை பார்த்த போது, விழுப்புரத்தை சேர்ந்த கோபி மகன் ஜீவா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விழுப்புரத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தனது தாய் வீடான அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் பிறகு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதற்கிடைேய அரை மணி நேரத்தில் ஐஸ்வர்யாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஐஸ்வர்யாவுக்கு சத்து குறைபாடு ஏற்கனவே உள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் விசாரணை நடத்தி வருகின்றார். கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சையின் போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், தாய் மூச்சுத்திணறலில் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story