2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள புலிமேடு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி திவ்யா (வயது 21). இவர்களுக்கு 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகளும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். திவ்யா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேவசன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திவ்யாவின் தாயார் கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட திவ்யாவிற்கு திருமணமாகி 4½ ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கவிதா மேல்விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story