2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை


2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
x

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

தீக்குளித்தார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெருநிலா கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுதா (வயது 35). இவர்களுக்கு ஹரிஹரன் (12) என்ற மகனும், ஜனனி (9) என்ற மகளும் உள்ளனர். நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாவிற்கு மன அழுத்த நோய் ஏற்பட்டு தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென சுதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த சுதாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போய் சேர்த்தனர்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து இறந்த சம்பவம் பெருநிலா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story