விபத்தில் தாய்-மகன் படுகாயம்


விபத்தில் தாய்-மகன் படுகாயம்
x

களக்காடு அருகே விபத்தில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் ஆனைகுளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சிவநம்பி (வயது 19). நேற்று முன்தினம் இவர் தனது தாயார் முத்துமாரியுடன் (39) மோட்டார் சைக்கிளில் களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். புதூர் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவநம்பி, முத்துமாரி படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த டோனாவூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சுந்தர் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story