வழிகாட்டி பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


வழிகாட்டி பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x

வழிகாட்டி பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

திருமயம்:

சிவகங்கை மாவட்டம், தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் அருண்குமார் (வயது 26). இவர், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் திருமயத்திற்கு சென்று கொண்டிருந்தார். காரைக்குடி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஊனையூர் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள வழிகாட்டி பதாகை மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story