திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது; கல்லூரி மாணவர் பலி


திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது;  கல்லூரி மாணவர் பலி
x

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர் பேரி கார்டில் மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர் பேரி கார்டில் மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.

சாைல தடுப்பில் மோதினார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூரைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24). முத்துகிருஷ்ணன் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முத்துகிருஷ்ணன் நேற்று அதிகாலை கல்லூரி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியில் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே சாலையின் நடுவே வைத்திருந்த பேரிகார்டில்(தடுப்பில்) மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பலி

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story