பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து வாலிபர் படுகாயம்


பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து வாலிபர் படுகாயம்
x

மேலச்செவல் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் சத்யா (வயது 28). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக சத்யா நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

மேலச்செவல் அருகே சாலை விரிவாக்க பணிக்காக புதிதாக பாலம் கட்டும் பகுதியை கடந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story