மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

களக்காட்டில் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 23). தற்போது இவர் களக்காடு நடுத்தெருவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி மணிகண்டன் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story