மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

பணகுடியில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர் போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பணகுடி மெயின் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் ஜோசப் ராஜன் (வயது 45). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடை முன்நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டார். பின்னர் ஜோசப் ராஜன் வெளியே வந்து பார்த்தபோது தன்னுடைய மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story