மோட்டார் சைக்கிள் திருட்டு
மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கக்கன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47), விவசாயி. கடந்த 22-ந் தேதி முனைஞ்சிப்பட்டி சந்தைக்கு வந்த அவர், அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ேமாட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story