மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

வடக்கு விஜயநாராயணத்தில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சரகம் தெற்கு காடன்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story