மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிள் திருடு போனது.
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரின் மகன் தளவாய் (வயது 48). விவசாயி. இவர் அங்குள்ள சுடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் டேங் கவரில் செல்போனும் இருந்ததாக தளவாய் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





