மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளை தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். அதனை மர்மநபர்கள் திருடி சென்றதாக அய்யப்பன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story