மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ஸ்ரீராம் அரவிந்தன் (வயது 29). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். அதனை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த செல்வகுமார் மகன் மாரியப்பன் (20) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.


Next Story