மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 11:35 AM GMT)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருடைய மகன் அந்தோணி ஆல்வின் (வயது 32). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் கீழ அழகாபுரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பழனிச்சாமி (26) என்பவர் அந்தோணி ஆல்வினின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story