மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி அடிவாரத்தை சேர்ந்தவர் ஹரிபிரபு (வயது 27). இவர், ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், பழனி அரசு ஆஸ்பத்திரி அருகே திண்டுக்கல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பழனி போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாப்பிநாயக்கன்வலசு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (37) என்பவர், ஹரிபிரபுவின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story