மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் பாளையங்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3-ந்தேதி இரவு ஆரோக்கியம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடியதாக ராமையன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிராஜா (வயது 20) என்பவரை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





