கடலூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் உள்பட 2 பேர் படுகாயம்


கடலூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் உள்பட 2 பேர் படுகாயம்
x

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்

ரெட்டிச்சாவடி,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகர் சேர்ந்தவர் கணபதி (வயது 42). கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குருவிநத்தத்தில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணபதி மற்றும் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பவீஷ்குமார்(23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பவீஷ்குமார் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story