மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; விவசாயி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 65). விவசாயியான இவர் சம்பவத்தன்று அவரது வயலுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மானோடை வாய்க்கால் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது எதிரே அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் லோகேஷ்(26), கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளங்கோவன், லோகேஷ், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story