கனகாம்பாள் கோவிலில் முளைப்பாரி திருவிழா


கனகாம்பாள் கோவிலில் முளைப்பாரி திருவிழா
x

முவலூர் கனகாம்பாள் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள கனகாம்பாள் அம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கனகாம்பாள், பிடாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நேற்று முளைப்பாரி திருவிழா நடந்தது.இதில் மூவாநல்லூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் முளைப்பாரியை எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் விட்டனர். முன்னதாக அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story