வீரனார் கோவிலில் முளைப்பாரி திருவிழா


வீரனார் கோவிலில் முளைப்பாரி திருவிழா
x

வீரனார் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கறம்பக்குடி-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை எடுத்து மேள-தாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வீரனார் கோவிலை வந்தடைந்தனர். இதில் சுந்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story